திருவண்ணாமலையில் 8ம் தேதி தீபத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற தீபத் திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது.
இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. |
ஞாயிற்றுக்கிழமை இரவு 12.15 மணியிலிருந்து திங்கள் இரவு 2.22 வரை கிரிவலம் செய்ய உகந்த நேரமாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தீபத் திருவிழாவை ஒட்டி, பக்தர்களுக்குத் தேவையான அனைத்துவசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது.
2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.தமிழக அரசு 1,200 சிறப்பு பஸ்களை முக்கிய நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்குகிறது.













Click it and Unblock the Notifications