For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பம்முகிறது பா.ஜ.க.: திமுக உறவை சீர் செய்ய முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நேற்று வரை திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்று பேசி வந்த பா.ஜ.கவின்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவோடுபோய், எப்படி அதிமுகவை இணைந்துப் பார்க்க முடியும், இந்தஇரு கட்சிகளையும் எப்படி எங்களால் சமமாகப் பாவிக்க முடியும் என்று புதிய பல்லவி பாட ஆரம்பித்துள்ளபா.ஜ.க.

சமீபத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முக்கிய தலைவர்கள் பலரும் பா.ஜ.கவுடனானஉறவை முறிக்குமாறு கருணாநிதிக்கு யோசனை கூறியுள்ளனர். இதனால் அக் கட்சியுடனான உறவைமறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு கருணாநிதி வந்துவிட்டதை பா.ஜ.க. தலைமை உணர்ந்து கொண்டுள்ளது.

பிரதமர் பதவிக் கனவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும்அதிமுக வேட்பாளர்களையே நிறுத்த முடிவு செய்துள்ளதால் திமுக கூட்டணியைவிட்டால் வேறு வழியில்லை என்றநிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுளளது.

இதையடுத்து திமுகவுடனான உறவை எக் காரணம் கொண்டும் மாநில பா.ஜ.கவினர் கெடுக்கக் கூடாது என்றும்,உறவைத் தொடர்வது குறித்து நானே கருணாநிதியுடன் நேரடியாகப் பேசிக் கொள்வேன் என்றும் பிரதமர்வாஜ்பாய், கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு மூலமாக மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாகத்தெரிகிறது.

கருணாநிதியை சமீபத்தில் சந்தித்த நாயுடு இதை அவரிடம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதையடுத்தே பா.ஜ.க. மாநில நிர்வாகிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க. பொதுச் செயலாளரும் இதுவரை அதிமுக ஆதரவாளராக இருந்தவருமான எச்.ராஜா இன்று சென்னையில்நிருபர்களிடம் பேசுகையில்,

திமுக தான் எங்களுடன் மத்தியில் கூட்டணியில் இருக்கிறது. அதிமுக எங்களின் எதிர்க் கட்சியாக உள்ளது. அப்படிஇருக்கையில் இரு கட்சிகளையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதும், பாவிப்பதும் சாத்தியமில்லை.

1999ம் ஆண்டில் வாஜ்பாய் அரசை அதிமுக கவிழ்த்த பிறகு இதுவரை அந்தக் கட்சியுடன் சேர்ந்து நாங்கள் மேடைஏறியதே இல்லை. இதனால் அதிமுகவுக்கு நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்வதே தவறானது.

திமுகவைவிட அதிமுகவுடன் தான் பா.ஜ.க. நெருக்கம் காட்டுவதாகச் சொல்வது பத்திரிக்கைகள் ஏற்படுத்தியபிரமை தான்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழுமையாகக்கட்டுப்படுவோம்.

அதே நேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி நீடிப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிதான் இறுதிமுடிவெடுக்க வேண்டும்.

வட மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள படுதோல்வி, அக்கட்சிக்கு சோனியா காந்தியால்தலைமை வகிக்க முடியாது என்பதையே காட்டுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் வாஜ்பாய் மீதுசோனியா காந்தி கூறிய புகார்களை மக்கள் ஏற்கவில்லை என்பது நிரூபனமாகியுள்ளது என்றார்.

மேலும் வைகோ விஷயத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே பொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நோட்டீஸ் அனுப்பியதே தவறு என்று ஆட்சேபம் செய்யும் தமிழக அரசின்செயல் தான் தவறானது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X