சட்டமன்றத் தேர்தல்: ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கரில் பா.ஜ.க. வெற்றி: டெல்லியில் காங்கிரஸ்
டெல்லி:
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பா.ஜ.க அதிகஇடங்களைப் பிடித்து வெற்றியடைந்துள்ளது. டெல்லில் மட்டும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 1ம் தேதி நடந்து முடிந்த நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கை இன்று காலைதொடங்கியது.
கருத்துக் கணிப்புகள் சொன்ன மாதிரியே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.கவும் டெல்லியில் காங்கிரசும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானில் நிலைமைதலைகீழாகியுள்ளது. இங்கும் பா.ஜ.கவே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
காலையில் வாக்குப் பதிவு தொடங்கியபோது சட்டீஸ்கரில் இரு கட்சிகளும் சமமான நிலையில் இருந்தன. ஆனால்,அடுத்தடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணிக்கு வந்துவிட்டது. இங்கும் அந்தக் கட்சியேஆட்சியமைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி-பைனல் என்று கருதப்படும் இந்தத் தேர்தல்களில் 3 மாநிலங்களைகாங்கிரசிடமிருந்து பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. காங்கிரசுக்கு மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications