வட மாநில தேர்தல்: பா.ஜ.க. வெற்றிக்கு வாஜ்பாயே காரணம்- கருணாநிதி
சென்னை:
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் வெற்றி, பிரதமர்வாஜ்பாயின் புகழுக்கும், தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றியை நோக்கிப்போய்க் கொண்டுள்ளது. டெல்லியில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ள வெற்றி மகிழ்ச்சிதருகிறது. இது வாஜ்பாய் அவர்களின் புகழுக்கும், தலைமைக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
மத்தியில், பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது. அதில் எந்த மாற்றம் இல்லை. ஆனால் மாநில அளவில்எந்தவித உறவும் இல்லை. அதேபோல, பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்திலும்மாற்றம் இல்லை
டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழகத்தில் 356வது சட்டப் பிரிவுபயன்படுத்தப்படுவதற்கான சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது. இது தொடர்பாக வாஜ்பாய் தமிழக அரசின் மீதுநடவடிக்கை எடுத்தாலோ, கண்டித்தாலோ மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
வட இந்தியாவில் பாஜக பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் அக் கட்சியிடன் உறவில் மாற்றத்தைஏற்படுத்துமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.