இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை:
காசோலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியும், காசோலை மோசடிவழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்றத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி விரைவு நீதிமன்ற நடுவராக இருப்பவர் கிருஷ்ணன். இவர் மீது காசோலை மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவை 5-வது குற்றவியல் நடுவர் ஜஸ்டின் டேவிட் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
வழக்கு தொடர்பாக நடுவர் கிருஷ்ணனுக்கு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார் ஜஸ்டின் டேவிட். இது குறித்துஅறிந்ததும், உயர்நீதிமன்றம் தலையிட்டு இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தது.
நீதிபதிக்கு எதிராகவே கைது வாரண்ட் பிறப்பித்ததால் ஜஸ்டின் டேவிட்டையும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும்அளவுக்கு நடந்து கொண்டதால், கிருஷ்ணனையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.