தூக்கு தண்டனை: 8 தமிழர்களையும் காக்க மலேசியாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழ் இளைஞர்களையும் காப்பாற்ற அந் நாட்டு அரசிடம்மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
போதைப் பொருள் வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு இந்த 8 தமிழர்களும் தூக்கு தண்டனையைஎதிர்நோக்கி சிறையில் அடைபட்டுள்ளனர்.
இவர்களைக் காப்பாற்ற மலேசிய அரசிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு நடத்திவருகிறார்.
அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியும், அவர்களை இந்திய சட்டத்தின்படி விசாரித்து நடவடிக்கைஎடுப்பதாகவும் சின்ஹா கூறியுள்ளார் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications