மரண தண்டனையை எதிர்த்து கமுதி, சென்னையில் உண்ணாவிரதம்
கமுதி & சென்னை:
மலேசியாவில் 8 தமிழக இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி கமுதியில்உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதே போல வரும் 7ம் தேதி சென்னையிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடக்கவுள்ளது.
மரண தண்டனையை எதிர்நோக்கும் 8 பேரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காக்கக்கோரி அம் மாவட்டத்தின் முக்கிய நகரான கமுதியில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில் திமுக, பாட்டாளி மக்கள் கட்சி உள்பட பல கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர்.
சென்னையில்...
இந் நிலையில் உலகத் தமிழர் பேரவை சார்பில் வரும் 7ம் தேதி சென்னையிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
வேலைக்காக மலேசியா சென்ற இந்த இளைஞர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வைத்திருந்தபோதைப் பொருளை இவர்கள் தான் வைத்திருந்தாக பொய்யாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
இவர்களை கீழ் நீதிமன்றம் விடுவித்தபோதும், மீண்டும் புதிதாக போதைக் கடத்தல் வழக்கைப் போட்டுஇவர்களுக்கு மரண தண்டனை வாங்கித் தந்துள்ளது மலேசிய போலீஸ்.
இதனால், இந்த அப்பாவி இளைஞர்களை மலேசிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications