கடற் புலிகளின் செயல்பாடு கவலை தருகிறது: இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்பிரிவு செயல்பாடுகள் குறித்த கவலையை இலங்கை அரசிடம்தெரிவித்துள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளித்ததாவது:
வங்காள விரிகுடா கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.இந்திய கடலோரப் பகுதிகளில், முக்கியமாக பாக் ஜலச் சந்தியில் கடலோரப் பாதுகாப்புப் படை தனதுகண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டுக்கு இரு கடற்படைகள் இருக்கக் கூடாது. இது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா தனதுகவலையைத் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் பாதுகாப்பு குறித்து தனது அக்கறையையும் இந்தியாதெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீவிரவாதிகளின் ஊடுவல்தொடர்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications