மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸ் அதிரடி சோதனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகமான அண்ணா மாளிகை மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களில்ஊழல் தடுப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் மோகன் ஆகியோரது தலைமையிலான ஐந்து போலீஸ் குழுக்கள் இந்த சோதனையில்ஈடுபட்டன.
வரி வசூல், கட்டட அனுமதி வழங்குவது, போர்வெல் கிணறுகள் வெட்டுவது, குடிநீர் இணைப்பு தருவதுஆகியவற்றில் மாநகராட்சி ஊழியர்கள் பெருமளவில் லஞ்சம் வசூலித்து வருவது வெளிப்படையானவிஷயமாகும்.
இதையடுத்து அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், யாரும் சிக்கவில்லை.
பல பொறியாளர்கள், நான்கு மண்டலங்களுக்கான உதவி ஆணையர்கள் ஆகியோரிடம் போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications