மயிலாடுதுறை பாஜக எம்.எல்.ஏ அலுவலகம் மீது குண்டு வீச்சு
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் அலுவலகத்தின் மீதுஇன்று அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அந்தக் கொட்டகைதீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறையில், கண்டனப் பேரணி நடத்த தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேசமயம், இந்த தினத்தை இந்து எழுச்சி நாளாக அனுசரிக்கப் போவதாக பாரதிய ஜனதாக் கட்சி மற்றும்வி.எச்.பி. ஆகியவை கூறியுள்ளன. இதனால் மயிலாடுதுறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று அதிகாலை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் அலுவலகத்தின் மீதுநாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடினர்.
இதில் அலுவலகக் கொட்டகை தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பா.ஜ.க. எம்எல்ஏவின் அலுவலகம் மீதுகுண்டு வீசப்பட்டதால் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications