நடு சாலையில் உருண்டோடிய காஸ் சிலிண்டர்கள்!
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு அருகே கார் மீது மோதி லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில்இருந்த நூற்றுக்கணக்கான காஸ் சிலிண்டர்கள் சாலையில் உருண்டோடி பீதியை ஏற்படுத்தின.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ஒரு லாரி காஸ் சிலிண்டர்களைஏற்றுக் கொண்டு வந்தது. அப்போது லாரிக்கு முன்னால் போன கார் மீது மோதி விட்டது.
இதையடுத்து லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் சாலையில்உருண்டோடின. 100 சிலிண்டர்கள் வரை லாரியில் இருந்தன. காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் சாலையில்உருண்டோடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். காஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் அங்குவிரைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து சிலிண்டர்களும் பத்திரமாக அங்கிருந்து அகற்றப்பட்டுவேறொரு லாரியில் ஏற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications