பாம்புக்கு பயந்து தீ வைத்த பெண் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாம்பு கடித்து விடும் என்ற பயத்தால் தன்னைச் சுற்றிலும் தீ வைத்துக் கொண்ட பெண், தீயில் கருகி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை அந்தப் பெண் தனியாக வீட்டில் இருந்தபோது பாம்பு உள்ளே நுழைந்துள்ளது.
பாம்பைக் கண்டு பயந்து போன அப்பெண், பாம்பு கடிக்காமல் இருக்க தன்னைச் சுற்றிலும் தீ வைத்துக் கொள்வதுதான் ஒரே வழி என்று நினைத்து, சுற்றிலும் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் தீ உடலில் பட்டு கருகினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தோர் அந்த அப்பாவிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அப்பெண் இறந்தார்.












Click it and Unblock the Notifications