For Daily Alerts
Just In
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்!
திருவண்ணாமலை:
புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை கோவிலில் கடந்த 28ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. இறுதி நாளான இன்றுஅதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் இன்று மாலை 6 மணியளவில்அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்படும். அதன் ஜோதியைப் பார்த்ததும், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இன்று நள்ளிரவு 12.15 மணியிலிருந்து நாளை இரவு 2.20 மணி வரை கிரிவலம் செய்ய உகந்த நேரமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர்.இதனால் அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, December 7, 2003, 5:30 [IST]