ஐ.எஸ்.டி. போன் கட்டணம் குறைப்பு: பி.எஸ்.என்.எல் அதிரடி
சென்னை:
சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பேச தொலைபேசிக் கட்டணங்களைப் பாரத சஞ்சார்நிகாம் லிமிடெட் நிறுவனம் பாதியாகக் குறைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல புதிய திட்டங்களைஅறிவித்துள்ளது. வரும் ஜனவரி 15ம் தேதி முதல் வெளிநாடுகளுக்குப் பேசுவதற்கான தொலைபேசிக்கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இங்கிலாந்திற்குப் பேச நிமிடத்துக்கு ரூ.7.20 கட்டணமாக வசூலிக்கப்படும். அமெரிக்கா, கனடா மற்றும்ஐரோப்பா நாடுகளுக்கான கட்டணம் 9.60 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து,ஹாங்காங் மற்றும் இந்தோனிஷியா நாடுகளுக்கான கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, இனி நிமிடத்திற்குரூ.12 வசூலிக்கப்படும்.
வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்தக் கட்டணத்தில் இனி பொதுமக்கள் பேசலாம்.இதுமட்டுமல்லாமல், தொலைபேசியை இடமாற்றம் செய்வதற்கு இனி எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாதுஎன்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications