ஊட்டி உறைபனிக்கு கூலி தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டியில், கடும் உறைபனி நிலவுகிறது. இதற்கு கூலித் தொழிலாளி ஒருவர்பலியானார்.
நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி கொட்டுகிறது. இதனால் காஷ்மீர் போல மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. ஊட்டி, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் அங்கு கடும் குளிர் வாட்டுகிறது.
ஊட்டி காந்தி நகர் பகுதியில் கடும் உறைபனிக்கு குமார் என்ற கூலித் தொழிலாளி பலியானாார். உறைபனிகாரணமாக ஊட்டியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு வந்த பயணிகளும் பனி காரணமாகவெளியில் வராமல் தங்களது விடுதி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications