For Daily Alerts
Just In
அயோத்தி: முஸ்லீம் தலைவர்களுடன் மீண்டும் பேசுகிறார் சங்கராச்சாரியார்
திருப்பதி:
அயோத்தி பிரச்சினை தொடர்பாக முஸ்லீம் மதத் தலைவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளதாக காஞ்சிசங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம்சங்கராச்சாரியார் பேசுகையில், அயோத்திப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி.கோபத்துடன் நீதிமன்றத்தை அணுகுவதால் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை.
அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையில் தலையிடக் கூடாது. அவர்களால்தான் பிரச்சினை பெரிதாகி விட்டது.
விரைவில் இந்தப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் முஸ்லீம் மதத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளேன்.அப்போது சுமூகத் தீர்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார் அவர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, December 8, 2003, 5:30 [IST]