For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கஞ்சா: ஜனனி வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதான கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை வருகிற15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனனியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவரை மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கஉத்தரவிட்ட நிலையில் இன்று கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மீண்டும்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது ரமீஜாவும், சதீஷும் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜனனி இன்னும் சென்னை அரசினர் மகளிர்காப்பகத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரை போலீசார் ஆஜர்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து வரும் 15ம் தேதிக்கு வழக்கை நீதிபதி சம்பத் குமார் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கை 60 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வாரம்உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X