கதர் கிராமத் தொழில்துறை ஊழியர்கள் 800 பேர் டிஸ்மிஸ்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு கதர் கிராம வாரியத் தொழிலாளர்கள் 800 பேரை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அரசின் கதர் கிராம வாரியத் துறையில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில்கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்த சுமார் 800 பேரை வேலையிலிருந்து நீக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை அறிந்ததும்,1993ம் ஆண்டுக்குப் பின்னர் வேலையில் சேர்ந்த 800 பேரும் சென்னைவந்துள்ளனர்.
கதர் கிராம வாரியத் துறையின் தலைமை அலுவலகமான குறளகம் வளாகத்தில் இன்று காலை முதல் அவர்கள்குழுமத் தொடங்கியுள்ளனர்.
கலங்கிய கண்களுடன் துறையின் செயலாளர் சூசன் மாத்யூவைச் சந்தித்து தங்களது கதி குறித்து அவர்கள்கேட்டவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications