நெல்லை: மணல் கொள்ளையை தடுத்த எம்.எல்.ஏ. கைது
திருநெல்வேலி:
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியாற்றிலிருந்து கேரளாவுக்குத் திருட்டுத் தனமாக மணல்எடுப்பதைத் தடுக்க முயன்ற அந்தத் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட பொது மக்கள் 300 பேர்கைது செய்யப்பட்டனர்.
ராதாபுரம் பகுதியில் உள்ள நம்பியாற்றில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக ஆழத்தில் மணல்அள்ளப்படுவதாகவும், கேரளாவுக்குத் திருட்டுத் தனமாக மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள்புகார் கூறி வந்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில், ராதாபுரம் சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு மற்றும் அப் பகுதி பொதுமக்கள் நம்பியாற்றிலிருந்துகேரளாவுக்கு மணல் அள்ளப்படுவதை எதிர்த்து கருங்குளத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் போராட்ட இடத்திற்கு வரும் வழியிலேயே அப்பாவு கைது செய்யப்பட்டார். கருங்குளத்தில் மறியலுக்குதிரண்டிருந்த சுமார் 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications