வைகோ: தமிழக அரசின் ஆட்சேபனை குறித்து விளக்கம் தர மத்திய அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி & சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரது கைது விவகாரத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேபனை மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழுநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வைகோ, கோபால் கைது செய்யப்பட்டது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்ப பொடா மறு ஆய்வுக் குழுவுக்குஅதிகாரமே இல்லை என ஆட்சேபனை மனு ஒன்றை தமிழக அரசு இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தது.

இதையடுத்து இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றுநீதிபதி சகார்யா தலைமையிலான குழு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வைகோ கோரிக்கை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

இதற்கிடையே நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரி வைகோ தாக்கல் செய்துள்ள மனுகுறித்து, நாளை மறுதினத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்ற நீதிபதிராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அவரசச் சட்டம் தொடர்பாகநாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதில் தன்னைக் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பொடாநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கை வரும் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அப்போது பேசிய வைகோ, நான் நாடாளுமன்ற விவாதததில் கலந்து கொள்வதைத் தடுக்கும் விதத்தில் தமிழகஅரசு வேண்டும் என்றே கால தாமதம் செய்கிறது. இதனால் தான் இன்று அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லைஎன்றார்.

இதையடுத்து அரசுத் தரப்பைக் கடிந்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 10ம் தேதிக்குள் பதில் தருமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டார். மேலும், முடிந்தால் அன்றைக்கே தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவித்தார்.

உயர் நீதிமன்றம் நோட்டீஸ்:

இந் நிலையில் பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதைஎதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+