வீரப்பன் "கோட்டையில்" நாய் வேட்டையாடி வரும் அதிரடிப்படை
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை இப்போது காட்டுப் பகுதி கிராமங்களில்நாய்களை சுட்டு வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வீரப்பனின் சொந்தக் கிராமமான கோபிநத்தம் மற்றும் அதைச் சுற்றிய மலை கிராமங்களில் இந்த நாய்வேட்டை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப் படையினருக்கு பெரும் தலைவலியாக இந்த நாய்கள்விளங்குகின்றன. அதிரடிப் படையினரைப் பார்த்ததும் நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன.
இதனால் வீரப்பன் கூட்டாளிகள், வீரப்பனுக்கு உதவி செய்வோர் தப்பி விடுவதாக அதிரடிப்படையினர்கருதுகின்றனர்.
மேலும், காட்டுக்குள் அதிரடிப் படையினர் செல்லும்போதும் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அங்கும்இந்தப் படையினரைக் காட்டுக் கொடுக்கின்றன இந்த நாய்கள்.
இதையடுத்து நாய்களை சுட்டுக் கொல்ல அதிரடிப் படையினர் முடிவு செய்தது.
இதுவரை கோபிநத்தம், அதைச் சுற்றிய கிராமங்களில் திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை அதிரடிப் படையினர்பிடித்துக் கொன்று விட்டனர். இதனால் அப் பகுதி கிராம மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது.
காடுகளுக்குள் விறகு சேகரிக்க செல்லும் போது தங்களுக்கு இந்த நாய்கள்தான் துணையாக இருப்பதாகவும் பிறமிருகங்களை நாய்கள் குரைத்து விரட்டி விடுவதால் தங்களது பாதுகாப்புக்கு அவை மிக உதவியாகஇருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
அதிரடிப் படையின் அதிரடி வேட்டையால் இப்போது மலைப் பகுதி கிராமங்கள் நாய்கள் இல்லாத கிராமங்களாகமாறி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.