சுற்றுச் சூழல் பாடம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது தமிழக அரசு
சென்னை:
சுற்றுப்புற சூழல் அறிவியல் பாடத்தை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்காதது தொடர்பான வழக்கில், தமிழக அரசின்தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
சுற்றுப்புறசூழல் அறிவியல் பற்றிய பாடத்தை பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைச் செயல்படுத்தத் தவறிய மாநிலங்கள்மீது உச்ச நீதிமன்றத்தில் 1991ம்ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதில் 11 மாநிலங்களுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆந்திரம், தமிழ்நாடு,அரியானா மாநிலங்கள் தவிர, 8 மாநிலங்கள் அபராதத் தொகையைக் கட்டிவிட்டன. அபராதம் செலுத்தத் தவறியஇந்த 3 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.












Click it and Unblock the Notifications