கதர்துறை ஊழியர்கள் 1.200 பேர் டிஸ்மிஸ்: அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு கதர் கிராம வாரிய கடைநிலை ஊழியர்கள் 1,200 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கதர் கிராம வாரியத் துறையில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவ் வாரியம்நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி 1,200 கடைநிலைஊழியர்களை வேலைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு ஒரு மாத சம்பளப் பணம் மட்டுமே வழங்கப்படும். ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படமாட்டாதுஎன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நீக்கம் செய்யப்பட்ட 1,200 பேரும் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்கள்.

வேலை நீக்கம் குறித்த தகவல் அறிந்ததும் இந்த ஊழியர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். துறையின் தலைமைஅலுவலகமான குறளகம் வளாகத்தில் கலங்கிய கண்களுடன் துறையின் செயலாளர் சூசன் மாத்யூவைச் சந்தித்துதங்களது கதி குறித்து பேச முயன்றனர்.

ஆனால் அவரின் உதவியாளர் மட்டுமே ஊழியர்களிடம் பேசினார். டிஸ்மிஸ் உத்தரவு உடனடியாக அமலுக்குவராது என இந்த ஊழியர்களுக்கு சமாதானம் கூறப்பட்டுள்ளது.

அரசுத்துறையின் செலவுகளைக் குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் அமைக்கப்பட்ட சுவாமிநாதன்கமிட்டியின் பரிந்துரையின்பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+