ஜெயலலிதா அரசியல் நாகரீகம் இல்லாதவர்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அரசியல் நாகரீகம் இல்லாதவர் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்ப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர்களில் ஒருவரானகுமாரவேலு கூறுகிறார். அதை ஆமோதிப்பதாக மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் சொல்கிறார்.
ஆனால், அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாவோ திமுக எங்கள் கூட்டணிக் கட்சி என்றும் அதிமுக எதிர்க்கட்சி என்றும் சொல்கிறார்.
இதன்மூலம் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. அதற்கு ஒருகட்டுப்பாடு போடுவது அந்தக் கட்சிக்கு நல்லது.
மத்திய அமைச்சரவையில் இருந்த ஜூதேவ் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டபோது அவரை கட்சியை விட்டு நீக்கினார்பிரதமர் வாஜ்பாய். அது அவரது நாகரீக அரசியலைக் காட்டுகிறது.
அதே போல சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து வாங்க முனைந்ததைஅறிந்து அவரைக் கட்சியை விட்டு நீக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதுவும் அரசியல்நாகரீகத்துக்கு சிறந்த உதாரணம்.
அதே நேரத்தில் எது அரசியல் நாகரீகம் அல்ல என்பதற்கும் உதாரணம் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அடுக்கடுக்காய் கண்டனக் கணைகளைப் பொழிந்த பிறகும் அது பற்றி கவலையேபடாமல் பத்திரிக்கைகளில் தன்னைப் (ஜெயலலிதா) பற்றி பாராட்டுரைகள் எழுதச் செய்வதும், அதைபத்திரிக்கைகள் எழுதுவதும் தான் நாகரீகமின்மைக்கு உதாரணங்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.