அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி நடுக்கடலில் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அந்தமானில் இருந்து கப்பலில் சென்னை வந்து கொண்டிருந்த இஸ்ரேலியர் நடுக் கடலில் கப்பலிலேயே இறந்தார்.
எம்.வி.நன்செளரி என்ற கப்பல் டிசம்பர் 4ம் தேதி போர்ட் பிளேரில் இருந்து சென்னை கிளம்பியது. இதில்பயணம் செய்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் வழியிலேயே இறந்தார்.
இன்று சென்னை வந்து சேர்ந்த கப்பலில் இருந்து அவரது உடல் இறக்கப்படவுள்ளது. அவரது மரணம்இயற்கையானது தானா என்று மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படும். பின்னர் அவரது உடல்உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications