சூதாட்டம்: கரூரில் 105 பேர் அதிரடி கைது
கரூர்:
கரூர் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 105 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.58,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் நகரில் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான கிளப்கள் உள்ளன. இங்கு மாலை நேரங்களில் சூதாட்டம்நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்குமாறு காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில், நேற்று மாலைகாவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெகந்நாதன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஐந்து சூதாட்ட கிளப்களுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சூதாட்டத்தில்ஈடுபட்டிருந்தவர்களை வளைத்து, வளைத்துப் பிடித்தனர். மொத்தம் 105 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.58,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்களில் பலர் நகரின் முக்கியஸ்தர்கள் என்பதால் கரூல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் சூதாட்டம் கொடி கட்டிப் பறந்தது.
இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்டோர் கூண்டோடு பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications