குதிரை உதைத்து ராணுவ வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குதிரைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு குதிரை உதைத்ததில் படுகாயமடைந்த ராணுவ வீரர்பரிதாபமாக பலியானார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங். ராணுவ வீரரான இவர், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவபயிற்சி மைதானத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு குதிரையேற்றப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு குதிரை, ராஜேந்திர சிங்கின் நெஞ்சில் பலமாக உதைத்து விட்டது. படுகாயமடைந்த ராஜேந்திர சிங்ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.












Click it and Unblock the Notifications