பெண்ணின் கையில் 8 கிலோ புற்றுநோய் கட்டி: அகற்றி மதுரை அரசு மருத்துவமனை சாதனை
மதுரை:
பெண்ணின் வலது கையில் இருந்து 8 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை அகற்றி மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முர்ஷிதா பேகம் என்ற அந்த 20 வயதுப் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பது மூன்று வருடங்களுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரின் கை வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.
அதை அவர் விரும்பாவிட்டால், புற்றுநோய்க் கட்டியை நன்கு வளரவிட்டு அதன்பின் அறுவை சிகிச்சை மூலம்அகற்றலாம் என்று மாற்று யோசனையையும் மருத்துவர்கள் அவரிடம் கூறினர். இதற்கு பேகம் ஒப்புக்கொண்டார்.
அதன்பின் கடந்த 3 வருடங்களாக அவரது கையில் புற்றுநோய்க் கட்டி வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில கையைத்தூக்கி எழுத முடியாத அளவுக்கு 8 கிலோ எடையுள்ளதாக அந்தக் கட்டி வளர்ந்தது. இதனால் படிப்பை அவர்பாதியிலேயே நிறுத்தினார்.
இந் நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அறுவைச் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டார். டாக்டர் மோகன் பிரசாத் தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்துபேகத்தின் கையிலிருந்த 8 கிலோ புற்றுநோய்க் கட்டி வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவ உலகில் இவ்வளவு பெரிய புற்றுநோயக் கட்டி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். சிகிச்சைக்குப் பின் பேகம் இப்போது எழுதும் அளவிற்கு தேறியுள்ளார். இருப்பினும் கதிரியக்கசிகிச்சை உள்ளிட்ட மேலும் சில சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியிருப்பதாக டாக்டர் மோகன் பிரசாத்கூறியுள்ளார்.