காங்கிரசில் இளங்கோவனுக்கு அகில இந்திய பதவி?
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல்தலைவர் இளங்கோவன் இன்று டெல்லி விரைந்தார். அவருக்கு அகில இந்திய அளவில் முக்கிய பதவி அளிக்ககாங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவராக வாசன் நியமிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டிகலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் 4 மாநில தேர்தலுக்குப் பின் நியமிக்கப்படுவார்கள் என்று சோனியா காந்திஅறிவித்திருந்தார்.இந் நிலையில் புதிய நிர்வாகிகளின் பட்டியலுடன் வாசன் நேற்று முன் தினம் டெல்லி சென்றார். இதனையடுத்துடெல்லி வருமாறு இளங்கோவனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதனை ஏற்று அவரும், தமிழக காங்கிரஸ்தலைவர்களில் ஒருவரும் இளங்கோவனின் தீவிர ஆதரவாளருமான பீட்டர் அல்போன்ஸூம் இன்று காலைடெல்லி சென்றனர்.நாளை இவர்கள் அனைவரும் தமிழக பொறுப்பாளர்கள் கமல்நாத் மற்றும் கெய்கவாட்டைச் சந்திப்பார்கள்.அப்போது நிர்வாகிகளை 450 லிருந்து 100 ஆகக் குறைக்கவேண்டும் என்று வாசன் வலியுறுத்துவார் என்றுதெரிகிறது.இதைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பதவி தருவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.சோனியாவையும் அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.