For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையில் ஜனனிக்கு அவசர சிகிச்சை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வயிற்று வலி காரணமாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஜனனி தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ளஅரசினர் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று மாலை வயிற்று வலி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.

ஜனனி வைக்கப்பட்டிருந்த வார்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் இரவோடு இரவாகஅவர் மீண்டும் மகளிர் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் அவரை மீண்டும் திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X