மைசூர் செல்ல முடிகிறது, கிருஷ்ணாவை சந்தித்து காவிரி நீர் கேட்க முடியாதா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை தரிசிக்க நேரம் உள்ளது, ஆனால் பெங்களூர் சென்றுஎஸ்.எம்.கிருஷ்ணாவைப் பார்க்க நினைவு வரவில்லையா என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர்கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் குழு கர்நாடகம்சென்றுள்ளது. அங்குள்ள விவசாயிகளுடன் அது விவாதித்து வருகிறது. அதன் பிறகு நம்பிக்கை பட்டுப்போகவில்லை என்று தமிழக விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
ஆனால் இங்குள்ள ஆளுவோருக்கு, மைசூர் சென்று சாமுண்டீஸ்வயை தரிசிக்க நேரம் உள்ளது. ஆனால்அங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் உள்ள பெங்களூர் சென்று எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பார்த்து விவசாயிகள்குறித்துப் பேச நேரமில்லை, நினைப்பும் இல்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இந் நிலையில் நாளை ஹைதராபாத்தில் இருந்து ஜெயலலிதாவும் சசிகலாவும் சென்னை திரும்பலாம் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து 14ம் தேதி மைசூர் சென்றுவிட்டு முதுமலை சென்று கஜபூஜையில் பங்கேற்பார்கள்என்றும் தெரிகிறது.
இது தவிர ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய பின் வழக்கம்போல் சில அமைச்சர்கள், அதிகாரிகளின் தலைகள்உருளலாம் என்ற தகவலும் பரவியுள்ளதால் அவர்கள் மத்தியில் டென்சன் தொற்றிக் கொண்டுள்ளது.