2 மனைவிகளுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம் தனது 2 மனைவிகளுடன், சென்னை தனி நீதிமன்றத்தில்ஆஜரானார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் தேனி பன்னீர் செல்வம். தற்போதுபாரதீய ஜனதாக் கட்சியில் உள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாகக் கூறி இவர் மீது தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேனி பன்னீர் செல்வம், அவரது மனைவிகள் ஜானகி,தனபாக்கியம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் தனது முதல் மனைவியுடன்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது 2 வது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ராஜமாணிக்கம்உத்தரவிட்டதால், அடுத்த முறை 2-வது மனைவியுடன் மட்டும் வந்தார்.
ஆனால் 2 மனைவிகளுடனும் வர வேண்டும் என்று கண்டிப்பாக நீதிபதி கூறியதால் தனது 2 மனைவிகளுடனும்நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் பன்னீர் செல்வம். இதைத் தொடர்ந்து 3 பேரிடம் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்பட்டது. பின்னர் வருகிற 12ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த நீதிபதி அன்றைய தினம் 3 பேரும்ஒன்றாக வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications