ரஜினிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ரசிகர் தற்கொலை
கோயம்புத்தூர்:
இறந்தாலும் நான் ரஜினி ரசிகன்தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற சூர்யகுமார்(28). தீவிரமான ரஜினி ரசிகரான இவர்வேலை ஏதுவும் இல்லாமல் வீட்டில் சும்மா இருந்து வந்துள்ளார்.
இந் நிலையில் வேலையின்றி மன உளைச்சலுக்கு ஆளான இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இறப்பதற்கு முன் ரஜினி, அவரது குடும்பம் மற்றும் காவல் துறையினருக்குத் தனித்தனியே மூன்று கடிதங்கள் எழுதிவைத்துள்ளார்.
ரஜினிக்குக் கடிதம்:
எனது தலைவர் ரஜினிக்கு 12ம் தேதி (நாளை) பிறந்தநாள். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான்இருந்தாலும், இறந்தாலும் ரஜினி ரசிகன்தான். இதை அவரிடம் கட்டாயம் தெரிவித்து விடுங்கள் என்றுகூறியுள்ளார்.
குடும்பத்தினருக்குக் கடிதம்:
இதுநாள் வரை உங்களுக்குப் பாரமாக இருந்து விட்டேன். என்னால் ரூ.10 கூட பிரயோஜனம் இல்லை. இனியும்உங்களுக்குப் பாரமாக இருக்க வில்லை. அடுத்த பிறவியிலாவது உங்களுக்கு நன்மை செய்யும் மகனாகப் பிறக்கவிரும்புகிறேன். என்னை எரித்து விடுங்கள் என்று எழுதியுள்ளார்.
காவல்துறைக்குக் கடிதம்:
எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. இது நானே எடுத்துக் கொண்ட முடிவு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications