அமெரிக்க விசா: ஜனவரி முதல் கைரேகை பதிவு கட்டாயம்
வாஷிங்டன்:
அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் ஜனவரி 5ம் தேதி முதல் கட்டாயம் கைரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
‘யு.எஸ். விசிட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய திட்டம் குறித்து அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புஅமைச்சக (எல்லை மற்றும் போக்குவரத்துப் பிரிவு) செயலாளர் ஹட்சின்சன் கூறியதாவது:
செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமலாக்கப்படுகிது.இதன்மூலம் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவில் நுழைய முயல்பவர்களை அவர்களது கைரேகை மூலம்எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பவர்களில் யாராவது அமெரிக்காவில் நுழைய முயன்றால் அவர்களையும்எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அதேநேரத்தில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் இங்குதங்கியிருப்பவர்களையும் கண்டுபிக்க முடியும்.
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது என்றார்.