For Daily Alerts
Just In
சென்னையில் பொதுமக்களின் போராட்டம்: அரசு மதுக்கடை மூடல்
சென்னை:
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து சென்னை அயனாவரத்தில் பள்ளி, குடிநீர்த் தொட்டிகள், மார்க்கெட் ஆகியவற்றிற்கு அருகே அமைக்கப்பட்ட அரசு மதுக் கடை அகற்றப்பட்டது.
அயனாவரம், போர்ச்சுகீஸ் சாலையில் டாஸ்மார்க் நிறுவனத்தின் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடைக்கு அருகே புகழ் பெற்ற டேனிஸ் பள்ளி, இரண்டு குடிநீர்த் தொட்டிகள், மார்க்கெட் ஆகியவை உள்ளன.
இதனால் மதுக் கடையை உடனடியாக மூடுமாறு கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் ற்ேறு சுமார் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினர்.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து கடை மூடப்பட்டது. வேறு இடத்தில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, December 11, 2003, 5:30 [IST]