9 அல் உம்மாவினருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி
திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1996ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மேலப்பாளையம் அருகே அமீன்புரம் என்ற இடத்தில் ஆறுமுகம் என்றஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மேலப்பாளையம்போலீஸார் 12 அல் உம்மா அமைப்பினரைக் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி ரகமதுல்லா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி, ஆடம், இப்ராகிம், மசூத் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்ற 9 பேரான கிச்சான்புகாரி, பச்சை அப்துல் ரகுமான், ஷாகுல் அமீது, ஷாஜகான், சலாவுதீன், ஷேக் பாதுஷா, சித்திக் அலி, காஜா, ரகூப்ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், தலா 20,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications