நக்கீரன் கோபால் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலின் காவலை டிசம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து பூந்தமல்லி பொடா நீதிமன்றம்உத்தரவிட்டது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கோபால். பொடாநீதிமன்றம் கூடியபோது, அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், நீதிபதி ராஜேந்திரனிடம் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில், நக்கீரன் கோபாலுக்கு எதிரான விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கையும் தயாராக உள்ளது. ஆனால் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் குற்றப் பத்திக்ரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை.எனவே கோபாலின் சிறைக் காவலை நீட்டிக்கக் கோரியிருந்தார்.
இதையடுத்து வருகிற டிசம்பர் 21ம் தேதி வரை கோபாலின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications