நாயுடு மீது ரூ. 550 கோடி மதுபான ஊழல் புகார்
ஹைதராபாத்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ரூ. 550 கோடி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைநடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹை-டெக் முதல்வர் என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருப்பவர் நாயுடு. அரசுக்குச் சொந்தமான மதுபானக்கழகத்துக்கு தனியாரிடம் இருந்து மது வகைகளை வாங்தியதில் ரூ. 550 கோடி அரசுப் பணத்தை தனியாருக்குநாயுடு வாரி இறைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுடு எனபவர் லஞ்ச ஒழிப்புப் போலீசிடம் சில ஆதாரங்களுடன்புகார் செய்தார். ஆனால், அந்த புகாரை போலீஸ் வாங்க மறுக்கவே தனி நீதிமன்றத்தை கவுடு அணுகினார்.
இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதமே இந்த புகார்மீதான விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாயுடு தவிர தனியார் மது பான நிறுவன உரிமையாளர்கள் மீதும் இந்த ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications