8 மீனவர்கள் மாயம்: இலங்கை கடற்படை கைவரிசை?
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களைக் காணவில்லை. இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை பிடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் 3 படகுகளில் கடந்த 10ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இதுவரை அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை.
காணாமல் போன மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் அல்லது இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளில் மீனவர்களிடையே பதற்றம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications