காவல் நிலையத்தில் வாலிபர் சாவு: உறவினர்கள் மறியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர், காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.காவலர்கள் அவரை அடித்துக் கொன்று விட்டதாக கூறி அவரது உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் வசித்த வந்தவர் கோவிந்தன். காட்டாங்குளம் என்ற இடத்தில் உள்ள குமார்என்பவரின் கடைக்கு விசிடி வாங்குவதற்காக கோவிந்தன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மோதல்ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குமாரின் சகோதரர் பாபு என்பவர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கவேபோலீஸார் வந்து மூன்று பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சிறிது நேரத்தில் கோவிந்தன் இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தனின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் திரண்டுமறியல் போராட்டம் நடத்தினார்கள். போலீஸார்தான் கோவிந்தனை அடித்துக் கொன்று விட்டதாக அவர்கள்கோஷமிட்டனர்.

உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதற்கிடையேகோவிந்தன் காக்காய் வலிப்பு வந்ததன் காரணமாகவே இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+