தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை உண்டு: மே.வங்க முதல்வர்
சென்னை:
தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உண்டு. அதை தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும்எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ்பட்டசார்யா கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் 11வது மாநாடு நடந்தது. இதன் இறுதியில்பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யா பேசுகையில், நானும் ஒருதொழிலாளிதான்.
எனது சக தொழிலாளி ஸ்டிரைக் செய்யக் கூடாது என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.அதனால்தான் மேற்கு வங்கத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமை வழங்கியுள்ளேன்.
பொடா, டெஸ்மா என தொழிலாளர்களுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்த சட்டம் எனது மாநிலத்தில்அமல்படுத்தப் பட மாட்டாது. தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உண்டு. அதை அவர்கள்இழக்கக் கூடாது, விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சிஐடியூவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.கே.பாந்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பொலிட் பீரோ உறுப்பினர்கள் சங்கரய்யா, உமாநாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பேசினர்.












Click it and Unblock the Notifications