வைகோ மனு: இன்றே விசாரிக்க கோரி நீதிபதியிடம் மனு?
சென்னை:
நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இன்றே விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் முறையிட மதிமுக வழக்கறிஞர்கள்முடிவுசெய்துள்ளனர்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ, நாடாளுமன்றத்தில்நடைபெறவுள்ள பொடா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்குமாறுகோரி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுவை பொடா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் வைகோ. இதற்கு இன்றைக்குள் பதில்அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களிலும் நாடாளுமன்றத்தில் பொடா மறுஆய்வு திருத்தச் சட்டமசோதா மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளதால் மதிமுக எம்.பிக்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வைகோவுக்கு கடிதம்எழுதியுள்ளார்.
இதையடுத்து இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, மேல் முறையீட்டு மனு மீது இன்றே தீர்ப்புவழங்குமாறு கோரி நீதிபதி குலசேகரனிடம் மனு கொடுக்க மதிமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஓட்டெடுப்பு நடைபெறுவதாக இருந்தாலும் கூட அதற்காக தயாராவதற்கு கால அவகாசம்தேவை என்பதால் இன்றே வைகோ மீதான தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரவுள்ளனர்.