"மப்"பில் மரம் ஏறியவர் இறங்க முடியாமல் தவிப்பு!
சென்னை:
குடிபோதையில் தென்னை மரத்தில் ஏறியவர்,இறங்க முடியாமல் கதறி அழுதார். இதையடுத்து அப் பகுதியைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் மரத்தில் ஏறி அவரை கீழே இறக்கி விட்டார்.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். மரம் ஏறும் தொழிலாளி. அப் பகுதி வீடுகளில் உள்ள தென்னைமரங்களில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்து வந்தார்.
நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு மதுக் கடைக்கு சென்று நன்றாக குடித்துள்ளார். பின்னர் போதையில்ராமகிருஷ்ண அய்யர் தெரு வழியாக வந்தபோது, அருண் பிரசாத் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர்அங்கிருந்த தென்னை மரத்தில் ஏறினார்.
வேகமாக ஏறியவர், ஏறி முடித்தபோது, போதை தலையைச் சுற்ற கீழே பார்த்துள்ளார்.அப்போதுதான் தான்மரத்தின் மீது அமர்ந்திருப்பதை உணர்ந்தார். அய்யய்யோ மரத்தில் ஏறி விட்டேன், இறங்க முடியவில்லையேஎன்று கூறி கதறி அழுதுள்ளார். இவரது கூக்குரலைக் கேட்ட அருண் பிரசாத் மற்றும் அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மரத்தில் ஏறி கார்த்திகேயனை கீழே இறக்கிக்கொண்டு வந்தார்.