இந்து பத்திரிக்கை வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பத்திரிக்கையாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, ‘இந்து’ பத்திரிக்கை ஆசிரியர் ரவிதாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற இருநபர்நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபையை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி, ‘இந்து’ மற்றும் ‘முரசொலி’பத்திரிக்கையாளர்கள் 6 பேரைக் கைது செய்ய தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கடந்த மாதம்7ம் தேதிஉத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து இந்தக் கைது உத்தரவைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘இந்து’ பத்திரிக்கை ஆசிரியர்ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபர்வால் மற்றும் சின்ஹாஅடங்கிய பெஞ்ச், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications