எம்.எல்.ஏ கைதை கண்டித்து கருணாநிதி உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சென்னை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏவும், தென் சென்னை மாவட்ட திமுகசெயலாளருமான அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகதலைவர் கருணாநிதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு இன்று மாலை உண்ணாவிரதம்இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி திமுகவினரைமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யக் கூடாது என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்திற்கு முன்னிலை வகிப்பதாகஅறிவிக்கப்பட்டிருந்த தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் தி.நகர் ஜெ. அன்பழகன் போராட்டத்திற்குவரவில்லை. அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக போராட்டத்திற்குத் தலைமைவகித்த ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

இந் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மாலை 5 மணியளவில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர்அலுவலகம் முன் திமுக தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார் என்று திமுக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+