கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: மறு டெண்டருக்கு தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மறு டெண்டர் கோர சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை அருகே மீஞ்சூர் என்ற இடத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைமேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது.

இதையடுத்து இஸ்ரேல் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பித்தன. இவற்றில்இஸ்ரேல் நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்த தமிழக அரசு ரஷிய நிறுவனத்தின் டெண்டர் குறித்துமுடிவெடுக்காமல் இருந்தது. இந் நிலையில் மறு டெண்டர் கோர தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரஷிய நிறுவனம், தமிழக அரசு உயர் அதிகாரிஒருவர் ரஷியாவுக்குப் போன் செய்து லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்காத காரணத்தால்தான் தங்களதுநிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மறு டெண்டர் விட தமிழக அரசுக்குத்தடை விதிக்கக் கோரியது.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன், தமிழக அரசு மறு டெண்டர் விடுவதற்கு இடைக்காலத் தடைவிதித்தார். இதை நீக்குமாறு கோரி தமிழக அரசு மனு செய்தது. ஆனால் இந்த மனுவை நிராகரித்த நீதிபதிமுருகேசன் இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும் வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும்உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+