வீரப்பன் சுற்றிவளைப்பு: அதிரடிப்படை தகவல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சந்தனக் கடத்தல் வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் வீரப்பன்பிடிபடுவான் என்றும் சிறப்பு அதிரடிப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதிகளில் தற்போது பனி கொட்டுகிறது. மேலும் கடும் குளிரும் நிலவுகிறது.இதனால் வீரப்பனைப் பிடிப்பது எளிதாக இருக்கும் என்றும், வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல்கிடைத்துள்ளதால் அதிரடிப்படை வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும்,

அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் தலைமையில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும்,விரைவில் வீரப்பன் பிடிபடுவான் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் நேற்று காலை அதிரடிப் படை வீரர்களுக்கும், வீரப்பன் கும்பலுக்கும் துப்பாக்கிச் சண்டைநடந்ததாகக் கூறப்படுகிறது.

குளிர் காய்ச்சல், வண்டு கடியால் அதிரடிப்படையினர் அவதி

வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் உள்ள பல வீரர்களுக்கு குளிர் காய்ச்சல் வந்ததால் அவர்கள் சேலத்தில்உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படை வீரர்கள் தற்போது காட்டில் நிலவும் கடும் குளிர்காற்று,பனிப் பொழிவு ஆகியவற்றால் சிரமப்பட்டு வருகின்றனர். அத்தோடு காட்டு மரங்களில் உள்ள வண்டுகளின்கடியாலும் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.

மேட்டூர், அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள 170வீரர்கள் குளிர் காய்ச்சல் மற்றும் வண்டுக் கடியால் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று சேலம்கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர்அனைவரும் மீண்டும் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+