நாடாளுமன்றத்தில் பொடா சட்டத் திருத்தம் தாக்கல்: திமுக ஆதரிக்குமா?
டெல்லி:
துணைப் பிரதமர் அத்வானி இன்று நாடாளுமன்றத்தில் பொடா மறுஆய்வுக் குழுவிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதை ஒடுக்க பொடாமாதிரியான வலிமையான சட்டம் தேவைப்படுகிறது. எனவே, இச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.
சில மாநில அரசுகள் பழிவாங்கும் நோக்குடன் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது இச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்காக மட்டும் இச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.
இந்த சட்ட திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பின்போது திமுக, மதிமுக, பாமக கட்சிகள் மத்திய அரசிற்கு ஆதரவாகஓட்டளிக்குமா என்பது தெரியவில்லை. இது குறித்து தங்களது நிலைப்பாட்டை தமிழகக் கட்சிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications