பா.ஜ.கவுடன் கூட்டணி: 20ம் தேதி திமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாரதீய ஜனதாக் கட்சியுடனான கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில்முடிவு செய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று திமுக மறியல் போராட்டத்தைநடத்தியது. இந்தப் போராட்டம் ஆரோக்கியமானதல்ல,தேவையற்றது என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, நாயுடுவின் கருத்துபொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடிக்க வேண்டாம் என்று நாயுடுகூறுவது போல இது உள்ளது.

கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு வரும் 20ம் தேதி காலை 9.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில்உள்ள முரசொலி மாறன் நினைவு கூட்ட அரங்கில் கூடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது குறித்து முக்கியமுடிவை எடுக்கும்.

ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை என்று வெங்கையா நாயுடுவே கூறி விட்ட பிறகு கூட்டணி ஆட்சியில்,அமைச்சர் பதவியில் நீடிக்க நாங்கள் விரும்பவில்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு முன்பு போராட்டம்நடத்திய வரலாறுகள் உண்டு என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+