1 மாத ஓய்வுக்குப் பின் ஊர் திரும்பும் யானைகள்
முதுமலை:
முதுமலை காட்டில் ஒரு மாத புத்துணர்ச்சி முகாமுக்குப் பின் கோவில் யானைகள் மற்றும் தனியார் யானைகள் இன்றுஅவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றன.
யானைகளுக்கு ஒரு மாத காலம் புத்துணர்ச்சி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து தமிழகம்முழுவதிலும் உள்ள கோவில்களில் உள்ள யானைகள், தனியார் நிறுவன யானைகள் முதுமலையில் உள்ளதெப்பக்காடு என்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டு புத்துணர்ச்சி கொடுக்கப்பட்டது.
நல்ல குளியல், நேரத்திற்குச் சாப்பாடு, மூலிகை மருந்துகள் என கடந்த ஒரு மாதமாக யானைகள் சந்தோஷமாகஇருந்து வந்தன. இந் நிலையில் நேற்று முகாம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் யானைகள் மீண்டும் அவர்களது ஊருக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.காட்டு வாழ்க்கை பழகி விட்டதால், இனிமேல் கோவில்களில் யானைகள் கொஞ்ச நாளைக்கு முரண்டு பிடித்துசேஷ்டைகள் செய்யும் என்று பாகன்கள் கவலை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications